என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கேரளா ஆறு மரணம்
நீங்கள் தேடியது "கேரளா ஆறு மரணம்"
கேரளாவில் ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. #RiverDeath
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குற்றிப்புரம் அருகே உள்ளது துக்னாபுரம். இந்த பகுதியை சேர்ந்தவர் மொய்து. இவர்களுக்கு ஷாகீர் (வயது20), ஷாகிம் (11) என்ற மகன்களும், ஜூமானா (14) என்ற மகளும் இருந்தனர்.
சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் பாரதபுழை ஆற்றில் கும்பிடி குளிக்க என்ற இடத்தில் குளித்தபோது ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் குற்றிப்புரம் போலீசார் அவர்களது உடலை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை அவர்கள் குளித்த இடத்தில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் 3 பேரும் தனித்தனியே இறந்து கிடந்தனர். அவர்களின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #RiverDeath
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X